×

குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் வேலுமணி தயிர்வித்துள்ளார். சென்னையில் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் லாரி உரிமையாளர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மழைநீர் சேமிப்பு திட்டத்தை ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதிக விலைக்கு தண்ணீர் விற்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்ய கூடுதலாக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Tags : SB Velumani , Minister of Water Supply and Drainage, SP Velumani
× RELATED அதிமுகவில் இருந்து என்னை மட்டுமல்ல,...