×

கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை :திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு

டெல்லி : காவிரியில் நீர் திறக்கப்படாததால் டெல்டா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக செயல்படுத்த வேண்டும் என்றும் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது என்றும் கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றும் கூறினார். மேலும் நீட் நுழைவுத்தேர்வு தேவையற்றது; அதை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றியும் நீட் நுழைவுத்தேர்வு தொடர்கிறது என்றும் டி.ஆர்.பாலு கூறினார்.


Tags : government ,Modi ,DR ,BALU Talk ,DMK , Cauvery, DM, MP DR Baloo, Delta, Lok Sabha, Central Government
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...