ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி எதிர்ப்பு

புதுடெல்லி: ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவையில் ஆதார் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார். மக்கள் ஆதாரை ஏற்றுக் கொண்டுள்ளனர், மேலும் இது தனிமனித சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்தார். இதையடுத்து, ஆதார் திருத்த சட்ட மசோதா, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என மக்களவையில் ஆர்.எஸ்.பி.உறுப்பினர் பேசினார்.

Related Stories: