பாகிஸ்தான் ராணுவ மருத்துமனையில் குண்டுவெடிப்பு : 10 பேர் படுகாயம்

ராவல்பிண்டி : பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர  குண்டுவெடிப்பில் சுமார் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பை அடுத்து அப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் சுற்றி வளைத்து யாரையும் அருகே செல்ல அனுமதிக்கவில்லை, செய்தியாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதால் மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, இது குறித்து பல செய்தியாளர்கள் டிவிட்டர் பதிவுகளில் பரப்பி வரும் தகவல்களின் படி இச்சம்பவம் பாகிஸ்தான் ராணுவத்தில் பதற்றநிலையை உருவாக்கியுள்ளது

Related Stories: