பெண்ணிடம் நகை பறிப்பு

பெரம்பூர்: வியாசர்பாடி எம்கேபி நகர் 8வது தெருவை சேர்ந்த ரமணி (40) என்பவர், நேற்று காலை தனது மகள் மற்றும் தாங்கள் வளர்க்கும் நாயுடன் மொபட்டில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே சென்றபோது, பைக்கில்  பின்தொடர்ந்து வந்த 2 பேர், திடீரென ரமணி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர். இதில் நிலைதடுமாறிய ரமணியும் அவரது மகளும் நாயுடன் கீழே விழுந்து, காயம்டைந்தனர்.தகவலறிந்து எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்த ரமணியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அநத பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: