புதுடெல்லி: முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளை தடுக்க இந்தியா தீவீரம் காட்ட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப், இந்த மாத துவக்கத்தில் (ஜூன் 5ம் தேதி) வர்த்தகத்தில் முன்னுரிமை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி அறிவித்தார். அதிபரின் அறிவிப்புக்கு சில தினங்களுக்கு பின்னர் இது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் ஹிங்டைசர் வெளியிட்ட செய்தியில், “இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்றால், இந்தியாவில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகள் அதிகமாக உள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியை அளித்துள்ளது.