சென்னை வீரர்கள் சாதனை

சென்னை: அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான உடல் செயல் திறன் போட்டியில் சென்னை வீரர்கள் முதல் 2 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  முதலாவது தேசிய அளவிலான உடல் செயல் திறன்  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் இந்தியா என்ற அமைப்பு நடத்திய இந்தப் போட்டியில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 170 வீரர்கள் பங்கேற்றனர்.இதில் சென்னையை சேர்ந்த உமர் கத்தாப், கார்த்திகேயன் ஆகியோர்  முதல் 2 இடங்களை கைப்பற்றினர். முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற இவர்கள் ஆக.30ம் தேதி சுவீடனில் நடைபெற உள்ள  ‘சர்வதேச உடல் செயல்திறன் சாம்பியன்ஷிப்-2019  போட்டியில்  இந்தியா சார்பில்  பங்கேற்க உள்ளனர்.

Related Stories: