சென்னை: தமிழகத்துக்கு தண்ணீர் தர முன்வந்த கேரள முதமலமைச்சர் பினராயி விஜயனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை அறிந்து தண்ணீர் தரத் தயார் என்று பினராயி விஜயன் அறிவித்தார். கேரள முதல்வர் அறிவிப்பை அடுத்து தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.