செம்பட்டி: ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் கடும் வெயில் காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் திண்டுக்கல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காமராஜர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. 24 அடி கொள்ளளவு உள்ள இந்த நீர்த்தேக்கத்திற்கு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான தாண்டிக்குடி, ஆடலூர், புல்லாவெளி, மங்கலம்கொம்பு, பெரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் வந்து சேர்கிறது.