திருவனந்தபுரம்: தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க கேரள அரசு முன் வந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு குடிநீர் வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.