சென்னை: சென்னை பாரிமுனை அருகே தனியார் நிறுவன சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பாரிமுனை அருகே மண்ணடி பகுதியில் உமாஷங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ கிருஷ்ணா டிரான்ஸ்போர்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி ஐந்தாவது மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.