கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் 120 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது 10 ஆண்டுகளாகியும் பணிகள் முடிவடையவில்லை என்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள மீனவர் கூறியதாவது, முகத்துவாரம் என்பது குறைந்தது 15 மீட்டராக இருக்க வேண்டும், ஆனால் இங்கு 5 மீட்டர் கூட இல்லாமல் இருக்கின்றது என்றும், மேலும் இதனுடைய ஆழம் 7 மீட்டர் இருக்க வேண்டும் ஆனால் தற்போது 2 மீட்டர் மட்டுமே உள்ளது.