மிளகாய் பொடி தூவி வழிப்பறி 7 பேர் கும்பல் அதிரடி கைது

பெரம்பூர்: மிளகாய் பொடி  தூவி வியாபாரியிடம் வழிப்பறி செய்த 7 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுகார்பேட்டையை சேர்ந்த வெங்கடாசலம் என்ற வியாபாரி கடந்த 12ம் தேதி வால்டாக்ஸ் சாலை ராஜப்பா தெருவில் பைக்கில் சென்றபோது ஒரு மர்ம கும்பல் மிளகாய் பொடி தூவி அவரது பையை பறித்து சென்றது. இதுதொடர்பாக பூக்கடை காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த நாகூர்மீரான் (33), ஆதில் (25),  டேவிட்சாலமன் (26), கவுதமன் (23), தேவராஜ் (24), ஷாஜகான் (20), அஸ்ரின் (23) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பைக்குகள், 3 செல்போன்கள், கத்தி மற்றும் மிளகாய் பொடியை பறிமுதல் செய்தனர்.

Related Stories: