×

திருமணத்திற்கு மறுத்ததால் பெண் போலீசை கொன்ற போலீஸ்காரரும் சாவு

திருவனந்தபுரம்:  கேரள  மாநிலம், ஆலப்புழா காஞ்ஞிப்புழா பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா புஷ்பாகரன்  (34). வள்ளிகுந்நம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வந்தார். கணவர்  சஜீவ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உண்டு. ஆலுவா போக்குவரத்து போலீசில்  பணிபுரிந்து வந்த அஜாஸ் (33) என்பவர் தன்னை திருமணம் செய்யுமாறு சவுமியாவை வலியுறுத்தினார். சவுமியா ஏற்கவில்லை. இந்நிலையில், கடந்த சில நாளுக்கு முன் அஜாஸ், சவுமியாவை அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்து  ெகாலை செய்தார். அஜாசும் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி  தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.



Tags : Married, female policeman, murdered
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...