சென்னை: உள்ளாட்சி துறையில் டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேச தடைவிதிக்கக் கோரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உள்ளாட்சி துறையில் கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான டெண்டர்களை தனது உறவினர் மற்றும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கியதாக புகார் எழுந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்ேபாது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வக்கீல், மு.க.ஸ்டாலின் பேச தடைவிதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து நஷ்ட ஈடு கேட்ட பிரதான வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.