சென்னை: தன் மீது தொடரப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்கை ரத்து செய்யகோரி மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1 கோடி நஷ்ட ஈடுகோரி எடப்பாடி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த பொது, இது தொடர்பாக முதலமைச்சர் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்தார்.