சென்னை: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிய திருநங்கைகளுக்கு( மூன்றாம் பாலினம் ) பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வழங்கினார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக 8 திருநங்கைகள் காவலர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தலைமை செயலகத்தில் வழங்கினார்.