சென்னை: சென்னை கடலோர பகுதியில் மாசு அளவை கண்காணிக்க நங்கூரமிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மிதவையை இந்திய கடற்படையின் ரோந்து படகு சேதப்படுத்தியுள்ளது. சென்னை கடலோர பகுதியில் கடல்நீரில் கலந்துள்ள மாசு அளவு, மற்றும் நீரின் தரத்தை கண்காணிக்க தேசிய கடல்சார் மையம் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான மிதவை ஒன்றை கடற்கரை ஓரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் நங்கூரமிட்டிருந்தது. மேலும் இந்த சோதனை திட்டத்திற்காக மத்திய அரசு நிதி வழங்கி இருந்த நிலையில் திட்டத்தை இன்று முறையே துவக்கி வைக்க புவியியல் அமைச்சகம் முடிவு செய்திருந்தது.