×

இந்தியாவிடம் படுதோல்வி; பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தேர்வு குழுவை கூண்டோடு கலைக்கக்கோரி வழக்கு

பஞ்சாப்: இந்தியாவிடம் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் ரசிகர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலாவில் உள்ள நீதிமன்றத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்தியாவிடம் தோற்ற சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்கப்பட்டுள்ளது. இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வு குழுவை கலைக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக விரிவாக பதிலளிக்க கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆட்சிமன்ற குழு அண்மையில் கூடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேலாண்மையில் விரைவில் முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிடம் படுதோல்வி அடைந்துள்ளதால் பாகிஸ்தான் அணிக்கான தேர்வுக்குழுவினர் மற்றும் பயிற்சியாளர்கள் கூண்டோடு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. 


Tags : India ,Pakistan Cricket Team , World Cup Cricket, India, Pakistan, Pakistan defeat, court, case,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...