மதுரை: அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் அமைப்பது தொடர்பான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கும் திட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இயந்திரம் வைக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த அரசு தரப்பில் கால அவகாசம் கேட்க்கப்பட்டது. அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.