உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற உலகக்கோப்பை வடிவில் அமர்ந்து வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்

சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றிபெற சென்னை வேலம்மாள் பள்ளியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்று சேர்ந்து உலகக்கோப்பை வடிவில் அமர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து உலகக்கோப்பை 2019 மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், குறிப்பாக இந்திய அணி வெற்றி பெற ரசிகர்கள் மிகவும் உறுதியுடன் இருக்கும் வேளையில் தற்போது அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதற்காக வாழ்த்து சொல்லும் வடிவில் ஒரு நிகழ்வானது நடைபெற்றது.

மேலும் அதில் உள்ள மாணவர்கள் யோகா ஆசனங்களை செய்து கொண்டு உலக கோப்பை வடிவில் அமர்ந்துள்ளனர். இதையடுத்து வருகின்ற 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து அதன் ஒரு பகுதியாகவும் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது. மேலும் இதில் மாணவர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து சொல்லியும், யோகாவின் அவசியத்தையும் பறைசாற்றிய வண்ணம் உள்ளனர். இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே பள்ளி மாணவர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.

Related Stories: