மதுரை: திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தை வெள்ளிக்கிழமை வரை கைது செய்யக்கூடாது என உயர்நிதிமன்றம் கூறியுள்ளது. முன்ஜாமின்கோரி பா. ரஞ்சித் தாக்கல் செய்த மனுமீது நீதிபதி ராஜமாணிக்கம் விசாரணை மேற்கொண்டார். கைதுக்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை வெள்ளிக்கிழமை வரை நீடித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.