டெல்லி : அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நாளை டெல்லி செல்கிறார். 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு தமது நிதிநிலை அறிக்கையை வரும் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசித்து நிதிநிலை அறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.