வெற்றிபெறப் போவது நாங்கள், பிறகு ஏன் தேர்தலை நிறுத்த வேண்டும்?: ஐசரி கணேஷ்

சென்னை: வெற்றிபெறப் போவது நாங்கள், பிறகு ஏன் தேர்தலை நிறுத்த வேண்டும்? என ஐசரி கணேஷ் பேட்டியளித்தார். மேலும் பதிவாளர் எடுத்த நடவடிக்கைக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் எங்களுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறினார். நடிகர் சங்க தேர்தல் ரத்தானதற்கு விஷாலும், நீதிபதி பத்மநாபனும் தான் காரணம் எனவும் தெரிவித்தார். விஷால் சரியாக செயல்படாததே தேர்தல் ரத்தாக காரணம் என குறிப்பிட்டார். நாங்களும், ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் எனவும், வாக்காளர் பட்டியலை இறுதிசெய்த பிறகு தேர்தல் நடைபெறும் எனவும் கூறினார்.

Related Stories: