சென்னை: தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வேலும் 2 நாட்கள் அனல்காற்று நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறுவதாவது; சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும். மேலும் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியிலும் அனல் காற்று நீடிக்கும்.அனல் காற்று வீசும் என்பதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீச வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.