சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துவது இயல்பான காரியம் அல்ல என்றும், சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்த இன்னும் வருடங்கள் இருக்கும் பட்சத்தில், இது குறித்து விவாதித்த பின்னரே ஒரு முடிவுக்கு வரமுடியும் என்றும், அதன் பின்னரே இதனை அமல்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனக் கூறினார். தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது எனவும், தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என கூறினார். தற்போது ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்து, நீர்நிலைகளை ஆழப்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன.