சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கேளிக்கை வரியை செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் வளாகத்தில் ஏ.ஆர்.ஆர்.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 5 திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. ஒரே வளாகத்தில் 5 திரையரங்குகளை வைத்துள்ள நிர்வாகம், கடந்த ஒரு வருட காலமாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரியை செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பொதுவாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் திரையரங்குகள் வசூலிக்கும் தொகையில் 30% கேளிக்கை வரியாக மாநகராட்சிக்கு செலுத்தவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செலுத்தாத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.