வாஷிங்டன் : அணுசக்தி ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகளை மீற போவதாக பகீரங்கமாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்கா கூடுதல் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா பல்வேறு வகைகளில் ஈரானுக்கு பொருளாதார நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், அணுசக்தி ஒப்பந்தத்தை மீற போவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்கா, ஈரான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு ஆசியாவில் கூடுதல் படைகளை அமெரிக்கா இறக்கி வருகிறது.