சென்னை: சென்னை விமான நிலையத்தில் ₹50 லட்சம் மதிப்புடைய 1.5 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 3 பேரை கைது செய்தனர். ரியாத்தில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த முகமது உசேன் ேஷக் (51) என்பவர் சுற்றுலா பயணி விசாவில் வளைகுடா நாடுகளுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து இவரது உடமைகளை சோதனையிட்டபோது, வளைகுடா நாடுகளில் இருந்து மீன் பிடிக்கும் நவீன கருவி ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதிகாரிகள் அதை பார்த்த போது வழக்கத்தை விட சற்று கனமாக இருந்தது. எனவே அந்த கருவியை கழற்றி பார்த்தபோது அதன் உள்பகுதிக்குள் தங்க துண்டுகள், தங்க பிஸ்கட்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். அவைகளின் மொத்த எடை 1.15 கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ₹38 லட்சம். இயைதடுத்து சுங்க அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, முகமது ஷேக்கை கைது செய்தனர்.