ஈரோடு: ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (40). எலக்ட்ரீசியன். இவர் தனது 1,230 சதுர அடி காலி இடத்திற்கு வரி செலுத்துவதற்காக சில நாட்களுக்கு முன்பு ஈரோடு சூரியம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 1ம் மண்டல அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, பில் கலெக்டராக உள்ள சூரியம்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் (50), தனக்கு ₹10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி குமார், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பில் கலெக்டரிடம் குமார் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், மாணிக்கத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.