சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் தனது 200 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில், தனக்கென புதிய டிஜிட்டல் கரன்சியை விரைவில் அறிமுகம் செய்கிறது. இது தொடர்பாக பேஸ்புக் முதன்மை நிர்வாகி டேவிட் மார்கஸ் கூறியதாவது: உலகளவில் பயன்படுத்தும் வகையில் பிட்காயினை போன்று டிஜிட்டல் கரன்சியை விரைவில் அறிமுகம் செய்ய பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவருக்கும் பணத்தை எளிதாக அனுப்பலாம். இதற்காக, தற்போது வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் பணத்தை அந்தந்த நாடுகளின் பணமாக மாற்ற கமிஷன் வசூலிக்கிறது.