சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி நேற்று காலை 6.10 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் கடுமையான குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. நாட்டில் பெருவெள்ளம், புயல் பூகம்பம் போன்றவைகள் ஏற்படும்போது அந்தப் பகுதியை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிப்பது போல் தற்போது இந்த கடுமையான வறட்சி மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கு கூட குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும். அதோடு மத்திய அரசு தமிழகத்துக்கு இந்த வறட்சியை சமாளிக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.