நாகையில் கடல் சீற்றம் விசைப்படகு மூழ்கியது

நாகை: நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி(35). இவர் தனக்கு சொந்தமான ₹1 கோடி மதிப்பிலான விசைப்படகை நம்பியார் நகர் கடலில் நங்கூரம் போட்டு நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை கடலுக்கு சென்ற மீனவர்கள் பார்த்தபோது நங்கூரம் போட்டு நிறுத்தியிருந்த படகை காணவில்லை. இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் படகின் உரிமையாளரிடம் தெரிவித்தனர். இதன் பின்னர் 20 பைபர் படகுகளில் நூற்றுக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் சென்று விசைப்படகை தேடினர். இதில் கடல் சீற்றத்தின் காரணமாக நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்ட விசைப்படகு சிறிது தூரத்தில் இழுத்து செல்லப்பட்டு கடலில் மூழ்கியதை கண்டுபிடித்தனர். இதையடுத்து விசைப்படகில் இருந்த வலைகள், மீன்பிடி சாதனங்கள் ஆகியவற்றை பைபர் படகு மூலம் எடுத்து வந்தனர். படகை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.

Related Stories: