தர்மபுரியில் கோயில் அருகே கிடந்த துப்பாக்கிகள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கள்ளத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன் வந்து ஒப்படைக்கும்படி மாவட்ட எஸ்பி ராஜன் உத்தரவிட்டார். இந்நிலையில், இண்டூர் மாரியம்மன் கோயில் பின்புறம் 2  துப்பாக்கிகள் கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, 61அங்குல நீளம் உள்ள 2 நாட்டு துப்பாக்கிகள் அங்கு கிடந்தது. இந்த துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: