×

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

கோவை:  பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து படம் எடுத்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), திருநாவுக்கரசு(27), மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேருக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிந்ததால் மீண்டும், நேற்று  வீடியோ கான்பரன்சிங் மூலம் சிஜேஎம் கோர்ட் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 5 பேரின் காவலை ஜூலை 1ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.



Tags : Pollachi , Pollachi Rape, Extension , Police
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!