×

பீகாரில் தகிக்கும் வெயில் பள்ளிகளுக்கு விடுமுறை

பாட்னா: பீகாரில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு வரும் 22ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வற்றி, குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல், பீகாரிலும் கடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது. மேலும், அங்கு  பன்றிக்காய்ச்சலும் பரவி வருவதால், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் 115 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. இதுவரை 70க்கும் மேற்பட்டோர் இம்மாநிலத்தில் வெயில் கொடுமையால் உயிரிழந்துள்ளனர். கடும் வெயிலால் மாணவர்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்திக் கொண்டு, அம்மாநில அரசு வரும் 22ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 9ம் தேதி வரை அங்கு பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




Tags : Vacation ,schools ,Vail ,Bihar , Bail , Bihar Holiday , schools
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...