புதுடெல்லி: நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என டெல்லியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணமாக உள்ளது. இதுகுறித்து அனைத்து கட்சிகளிடையே பல தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மேற்கண்ட திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் வரும் 19ம் தேதி எதிர்கட்சிகளிடத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறியதாவது:ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதனை எங்களது தரப்பில் எதிர்க்கிறோம். இதில் திட்டம் குறித்து வருகிற 19ம் தேதி ஆலோசனை நடத்துவதற்கு பிரதமர் மோடி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.