சென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடக்கோரி, நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. வணிகர் சங்கம் தொடர்பாக தங்களுக்கு வந்த புகாரை பரிசீலித்த பட்டினப்பாக்கம் போலீசார் சத்யா ஸ்டூடியோ நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், விஷால் அணிக்கும், எதிரணிக்கும் பிரச்னை உள்ள சூழலில் தேர்தல் நடைபெற உள்ளதாலும், அன்றைய தினம் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்; அமைச்சர்கள் குடியிருப்புகள், நீதிபதிகள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ள பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.