நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முட்டைக்கு விலை நிர்ணயம் செய்து வரும் தேசிய முட்டைஒருங்கிணைப்பு குழு, நேற்று முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தியது. இதையடுத்து முட்டையின் பண்ணை பரிந்துரை விலை 430 காசில் இருந்து 440 காசாக உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், முட்டை விலை 45 காசுகள் வரை உயர்ந்துள்ளது. இது குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், ‘கேரளாவில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இது போல மற்ற மண்டலங்களிலும் முட்டை விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால்தான் முட்டை விலை உயர்கிறது என்றனர்.