சென்னை: சென்னை விமான நிலையத்தில் புளுடூத், ஸ்பீக்கரில் ₹38 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கெட்களை கடத்திய பயணி கைது செய்யப்பட்டார். ரியாத்திலிருந்து சென்னைக்கு நேற்று காலை 5.30 மணிக்கு கல்ப் ஏர்ேவஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சாதிக் ஷேக் (22) என்பவர் ரியாத்திற்கு சுற்றுலா பயணியாக சென்று சென்னை திரும்பினார்.
சந்தேகத்தின் பேரில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பயந்துகொண்டு அதிகாரிகளிடம், “நான் எதுவும் கடத்தி வரவில்லை. வேண்டும் என்றால் என்னுடைய சூட்கேசை சோதித்து கொள்ளுங்கள்” என்றார்.