சென்னை: சென்னையில் இருந்து மலேசியாவுக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ₹8.5 லட்சம் மதிப்புள்ள கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா விமானம் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது. அதில், பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பினர். அப்போது, சென்னையை சேர்ந்த முஸ்தபா (27) மற்றும் ஹாஜா மொய்தீன் (24) ஆகிய இரண்டு பேர் சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியா செல்ல வந்தனர். அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டதில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள், இரண்டு பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று அவர்களது உடல் முழுவதும் பரிசோதித்தனர்.