×

சிக்னல் கோளாறு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

சென்னை: செங்கல்பட்டு - தாம்பரம் வழிதடத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதியடைந்தனர். செங்கல்பட்டு - தாம்பரம் ரயில் தடத்தில் சிங்கப்பெருமாள்கோவில் - பரனூர் இடையே நேற்று காலை 10.30 மணிக்கு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், தென்மாவட்டத்தில் இருந்து சென்னை வந்த சோழன் எக்ஸ்பிரஸ், சென்னை - கடற்கரை விரைவு ரயில் மற்றும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. தகவலறிந்து செங்கல்பட்டு ரயில் நிலைய பொறியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிக்னலில் ஏற்பட்ட கோளாறை சீரமைத்தனர். அதன்பின்னர், சுமார் 11.30 மணிக்கு  போக்குவரத்து சீரானது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.



Tags : Signal Disorder, Train Service,Impact, Passenger Ave.
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...