ஓட்டல், ஐ.டி. நிறுவனங்கள் மூடவில்லை என்று அமைச்சர் சொல்வது பொய் : வைகோ பேட்டி

சென்னை: தண்ணீர் பிரச்னையால் ஓட்டல்கள், ஐ.டி. நிறுவனங்கள் மூடப்படவில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுவது, அப்பட்டமான பொய் என்று, வைகோ பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் தண்ணீர் பிரச்னையை தீர்க்காவிட்டால் அரசு விபரீதத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, வைகோவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு வைகோ பதில் அளித்தார்.  

பின்னர் வெளியே வந்த வைகோ பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லையென்று அமைச்சர் சொல்வது பொய். ஏராளமான ஓட்டல்கள் மூடப்பட்டன. ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு, இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும். இல்லையென்றால் விபரீதம் ஏற்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: