வேலூர்: குடிநீர், முதியோர், விதவை உதவித்தொகை கேட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார், 500க்கும் மேற்பட்ட மக்களுடன் வந்து கலெக்டரிடம் கட்டுக்கட்டாக மனுக்களை வழங்கினார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், தொகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோருடன் வந்து கலெக்டரிடம் 1952 மனுக்களை அளித்தார். தொடர்ந்து தனது சார்பில் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டம் எனது தலைமையில் நடந்தது.