ஜகார்த்தா: கிழக்கு இந்தோனேசியாவில் இன்று திடீரென நிலநடுக்கம் சக்திவாய்ந்த ஏற்பட்டது. புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் ஆபத்துகளுடனே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா மாகாணத்தில் உள்ள குபாங் தீவு அருகே இன்று காலை 11.35 மணிக்கு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.