×

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தேசப்பற்றா? கம்பீரை வம்பிழுத்த நெட்டிசன்கள்...

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தேசப்பற்றா? என்று காம்பீரை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கவுதம் காம்பீர். இவர் புல்வாமாவில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். எல்லையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுடன் எவ்வித உறவும் வைத்து கொள்ள கூடாது எனவும், கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க வேண்டாம் என காம்பிர் தெரிவித்தார்.

ஒரு போட்டியில் விளையாடாமல் இரண்டு புள்ளிகள் போனால் அது ஒரு பெரிய பிரச்னை இல்லை எனவும் தெரிவித்தார். இறந்து கிடக்கும் வீரர்களின் உயிரை விட விளையாட்டு ஒன்றும் பெரிதில்லை என்கிற தொனியில் பேசியிருந்தார். புல்வாமா தாக்குதலும் தேர்தல் நேரம் என்பதால் கவுதம் காம்பீரின் இத்தகைய பேச்சு அனைவராலும் கவனிக்கப்பட்டது. கவுதம் காம்பீருக்கு ஆதரவாகவும், மாறுபட்ட கருத்துகளும் எழுந்தன.

இந்நிலையில் பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என்று கருத்து தெரிவித்த நிலையில் நேற்றைய போட்டியில் வர்ணனையாளராக இருந்தார். இதற்கு சமூகவலைதளங்களில் அவரை கலாய்த்து வருகின்றனர். உங்கள் தேசப்பற்றெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும்தானா என கேள்வி எழுப்பினர். ஆனால் காம்பீர் தான் பேசியதை எல்லாம் மறந்துவிட்டு நேற்று நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் இடையேயோன உலகக் கோப்பை போட்டியின்போது வர்ணனையாளராக இருந்தார்.

இதனை வைத்துதான் நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். உங்கள் தேசப்பற்றெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும்தானா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆமா.. கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுக்க வந்தாச்சு.. இப்போ உங்க தொகுதியை யார் பாத்துக்கிறாங்க எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அன்று போட்டியை புறக்கணிக்க வேண்டும் என சொன்னவர், இன்றோ ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார் எனவும் சிலர் காம்பீரை மறைமுகமாக சாடியுள்ளனர்.


Tags : Gautam Gambhir, Election, Delhi MP, BJP, Pakistan, India, Cricket, Commentator
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...