அம்பத்தூர்: ஆவடி அடுத்த பட்டாபிராம், அன்னை சத்யா நகர், பிளவர் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (34). அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், சுப்புலட்சுமி நகரை சேர்ந்தவர் பானுபிரியா (34). இவர்கள் அம்பத்தூரில் ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தொழில்நுட்பம் படித்தபோது நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது.இந்நிலையில், பானுபிரியாவிடம், தனக்கு நிறைய கடன் உள்ளது. அதை அடைக்க முடியாமல் தவித்து வருகிறேன். கடன் தொகையை அடைக்க உதவி செய்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ராதாகிருஷ்ணன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய பானுபிரியா, சுமார் 40 பவுன் நகைகளை ராதாகிருஷ்ணனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு பானுபிரியாவுடன் பழகுவதை குறைத்ததுடன், திருமண பேச்சை எடுத்தால் நைசாக ராதா கிருஷ்ணன் நழுவிக்கொண்டார்.