தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மெணசி அருகே குண்டல்மடுவு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(32). இவரது மனைவி காவ்யா(23), தர்மபுரி எஸ்பி ராஜனிடம் நேற்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொம்மிடியில் டூவீலர் ஒர்க் ஷாப் நடத்தி வரும் எனது கணவர் சண்முகம், அதே பகுதியை சேர்ந்த ஒரு ஏலச்சீட்டு நிறுவனத்தில், ₹4 லட்சம் சீட்டு எடுத்த நண்பர்களுக்காக, ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார். சீட்டு எடுத்தவர்கள் பணத்தை உரிய முறையில் திரும்ப செலுத்தவில்லை. இதனால், கடந்த 12ம் தேதி ஏலச்சீட்டு நடத்துபவர்கள், ஒரு கும்பலாக எனது கணவரின் ஒர்க் ஷாப்பிற்கு சென்று, வட்டியுடன் ₹5 லட்சம் தர வேண்டும் என கேட்டு அவரை மிரட்டினர்.