மரக்கடையில் தீ விபத்து

துரைப்பாக்கம்: மடிப்பாக்கத்தை சேர்ந்த கமலா (45) என்பவர், சோழிங்கநல்லூர் ராஜீவ்காந்தி சாலையில் மரக்கடை நடத்தி வருகிறார்.   நேற்று காலை இந்த கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கடையில் இருந்த மரக்கட்டைகள் எரிந்து நாசமானது. செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: