கூடலூர்: தேனி மாவட்டத்திலுள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் இருபோக சாகுபடி நிலங்கள் பெரியாறு அணை நீரை நம்பி உள்ளன. இந்த நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து முதல் போக விவசாயத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்தாண்டு அணைக்கு எதிர்பார்த்த நீர்வரத்து இல்லை. தற்போது அணையிலிருந்து தமிழக பகுதி குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்போகத்திற்கு ஜூன் முதல் வாரம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை.